நாட்டின் சப்ரகமுவ, மேல், வடமத்திய, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலைநாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மா
ற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 27 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.
மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழைக்கான காலநிலை காணப்படலாம்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக பொலன்னறுவை பிரதேசத்தில் 35.8 செல்சியஸ் பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 14.0 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்நாட்டில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக பண்டாரவளை பூனாகல பிரதேசத்தில் 54.0 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment