15 Jun 2015

உலக சுற்றாடல் தினத்ததை முன்னிட்டு சிரமதானம்.

SHARE

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள  விவேகானந்த தொழில் நுட்பக் கல்லூரியால் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒழுங்கமைப்புடன் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் கல்லூரி பயிலுனர்களால் சிரமதானமும் நிழல் தரும் மரங்கள் நடுதல் நிகழ்வும்   நடைபெற்றது. 

இதன்போது மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி திருமதி.ஜெயலக்மி பாஸ்கரன் மரத்தினை நட்டு ஆரம்பித்து வைத்தார். பின்னர் ஐக்கிய நாடுகள் சபை  சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம்,  வன  பாதுகாப்பு திணைக்களம், மற்றும், மண்முனைப் பற்று பிரதேச சபை, ஆகியவற்றின் ஆதரவுடன் கல்லூரி நிருவாகத்தினரும் மாணவர்களும் மேற்படி வைத்தியசாலை வளாகத்தை சிரமதானம் மூலம் சுத்தம் செய்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: