3 May 2015

தென்றல் சஞ்சிகையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும்  தென்றல்  சஞ்சிகை 2015 இல் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடத்திய முன்னோடிப் பரீட்சையின் மூன்றாம் கட்டத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (25) மட்.கொக்கட்டிச்சோலை ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய கேட்போர் கூடத்தில்நடைபெற்றது,

இதில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதையும், தென்றல் பிரதம ஆசிரியர் கிருபாகரன், தென்றலின் அலோசகர்களான போபாலபிள்ளை, ரவீந்திரன், ஆகியோர் உரையாற்றுவதையும். கலந்து கொண்ட மாணவர்களில் ஒருபகுதியினையும் படத்தில் காணலாம்.








SHARE

Author: verified_user

0 Comments: