
நேற்று
பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட் அரசாங்க அதிபர் திருமதி
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் 1 தொடக்கம், 4 வரையான தேசிய தொழில் தகமைச் சான்றுகளுக்கான
கற்கைகள் இருக்கின்றன. இந்த 4 வரை கற்ற மாணவர்கள் 1156 பேர் மட்டக்களப்பில்
தற்போதுள்ளனர்.
இருப்பினும்
இவர்களுக்கான மேற் கற்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எனவே
5,6 ஆம் நிலைக் கற்கைகளை மேற்கொக்ளக்கூடிய பல்கலைக்கழக கல்லூரி,
தொழில்நுட்பவியல் கல்லூரிகள் அமைக்கப்படவேண்டும். அதற்கு மாவட்ட அரசாங்க
அதிபர் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தொழில்
நுட்பக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டல் திறன் எனும் பாட அலகு
இணைக்கப்படவேண்டும். இதற்கான பாடத்திட்டமானது சிறுவர் பாதுகாப்பு
நிறுவனத்தின் ஊடாக வை.எம்.சி.ஏ யினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைப்
பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையினையும் அரசாங்க அதிபர்
மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தொழில் நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதே
மாவட்ட தொழில் நுட்பக் கல்வி வழங்குனர்களுக்களை ஒருங்கிணைத்து
செயற்படுத்துவதற்காகவே இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில்
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு தொழில்நுட்பக்
கல்லூரியின் பிரதி அதிபர் எஸ்.தியாகராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத்
தலைவர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment