(கமல்)
மட்டக்களப்புஇசெட்டிபாளையம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் ரி.அருள்ராசா தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையில் கல்வி கற்ற பலர் கலந்து கொண்டனர். இங்கு புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள்இபாடசாலையின் அபிவிருத்திஇபிரதேசத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது பிரதேச மாணவர்களின் நன்மை கருதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment