7 Mar 2015

வெளி மாவட்ட மீனவர்களின் வருகைக்கு உள்ளுர் மீனவர்கள் எதிப்பு ஆர்ப்பாட்டம்

SHARE
வெளி மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக தமக்கு தகுந்த தீர்வு கிடைக்க வேண்டும் என கோரி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல மீனவர் சங்கங்களும் இணைந்து 03 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 06 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின்; முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

இந்த கோரிக்கைகளில் வெளி   மாவட்ட மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் வந்து இங்கு தங்கி இருந்து மின்பிடியில் ஈடுபடுலை தடை செய்ய வேண்டும். மற்றும் தமது பிரச்சினையை தீர்க் எத்தனிக்காத மாவட்ட மீன்பிடி திணைக்க உதவிப் பணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் மற்றும் சுறுக்கு வளை டைனமோட் போன்ற தடை செய்யபட்ட மீன் பிடி முறையை தடுக்க வேண்டும் போன்றவையே இவர்களின் 3 ன்று அம்ச கோரிக்கையாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: