21 Feb 2015

கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம்.

SHARE
 மட்டக்களப்பு கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம் கிரான் மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக் கிழமை (20) கோ.தினேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜே.கலாராணி மற்றும் கிரான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர த.விந்தியன் உட்பட கிராமன் பிரதேச இளைஞர்களும், கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள 24 இளைஞர் கழகங்களை ஒன்றிணைத்து, கிரான் பிரதேசத்திற்குரிய புதிய இளைஞர் கழக சம்மேளத்திற்குரிய நிருவாகம்  தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது தலைவராக சு.சுதாகரன், செயலாளராக த.விந்தியன்,  பொருளாளராக சி.ஜீவரஞ்சினி, அமைப்பாளராக கோ.தினேந்திரன், உபதலைவராக த.கிசோத் உபசெயலாளராக தி.தனுக்சன், உப அமைப்பாளராக இ.சசிகரன், ஆகியோர் சிரேஸ்ட பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: