13 Feb 2015

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துறைசார் ஆராய்ச்சி மாநாடு

SHARE
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது துறைசார் ஆராய்ச்சி மாநாடு வியாழக்கிழமை 12 நடைபெற்றது. 

பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.கோபிந்தராஜா தலைமையில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் இம்முறைமாநாடு நடைபெற்றது.

“பன்மைத்துவ அறிவினூடாக வெற்றியின் பதிவுகள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த போராசிரியர் ரீ.வேல்நம்பி பிரதம உரையை நிகழ்த்தினார்.
மனிதப் பண்பியல் தூய பிரயோக விஞ்ஞானம், கலை கலாசார சமூகவியல் மற்றும்  சுகாதார பராமரிப்பு விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: