29 Jan 2015

மட்டில் ஒரு இலட்சத்து 47,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

இம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 47,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டதாக மாவட்ட கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.

கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டிருந்தது.

தற்போது பாரிய இயந்திரங்களினூடாக அறுவடை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய வெள்ளம் காரணமாக பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: