2 Jan 2015

கிழக்குப் பல்கலைக்கழகம் 12ஆம் திகதி மீள் ஆரம்பம்

SHARE
மட்டக்களப்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த  கிழக்குப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அனைத்துப் பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பமாகவுள்ளதாகவும் சகல மாணவர்களும் 12ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அனைத்துப் பீடங்களையும் சார்ந்த சகல மாணவர்களுக்குமான தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 12.01.2015 (திங்கட்கிழமை) முதல் மீள் ஆரம்பமாகும்.

விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும் தத்தமது விடுதிகளுக்கு எதிர்வரும் 11.01.2015 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணி முதல் வருகை தரமுடியும்.

மேலதிக விபரங்களுக்கு உதவிப் பதிவாளர் (மாணவர் நலன்புரி) தொலைபேசி இலக்கம்: 065-2240731 மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: