மட்டக்களப்பின்
சகல இடங்களிலும் தொடர்சியான மழை பெய்த வண்ணமே காணப்படுகிறது . இதனால் பல
கிராமங்கள் வெள்ள நீரினால் நிரம்பிய வண்ணமே காட்சி அளிக்கின்றனகுறிப்பாக படுவான்கரைப்பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டு இருக்கின்றன.வீட்டினுள்ளே வெள்ள நீர் நிரம்பிய வண்ணமே காணப்படுகின்ற நிலையில் அரசடித்தீவு விக்கினேஸ்வர வித்தியாலயத்தில் மக்கள் தங்கியுள்ளனர். இதனை
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மற்றும்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் போன்ற
பலர் நேரடியாக பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான நிவாரணங்களையும்
வழங்கி வைத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment