13 Dec 2014

த ம. வி. பு. க. தேர்தல் அலுவலகம் வாகரையில் திறந்துவைப்பு -

SHARE
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் வாகரை தேர்தல் அலுவலகம்   திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: