14 Dec 2014

ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவை ஆதரித்து ஊர்வலம்

SHARE
தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவை ஆதரித்து சனிக்கிழமை(13) தெகியத்தகண்டியில் ஊர்வலம் இடம்பெற்றது.

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்வூர்வலத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் தெகியத்தகண்டிக்கான காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர், அமைச்சர்கள் உட்பட ஆதரவாளர்கள் பாதாதைகளையும் ஜனாதிபதியின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு தெகியத்தகண்டி பொது சந்தையிலிருந்து பிரதான வீதியூடாக சாலிக மண்டபத்தை சென்றடைந்னர்.

SHARE

Author: verified_user

0 Comments: