20 Dec 2014

மண்டலப் பெருவிழா

SHARE
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக்குழு நடத்தும் மண்டலப் பெருவிழா, மட்டக்களப்பு நாவலடி, காயத்திரி ஆலயத்தில்  சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழவினர் தெரிவித்தனர்.

காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு அபிஷேகப் பூசை, 10 மணிக்கு பஜனை, 12 மணிக்கு ஐயப்பனின் மண்டலப் பூசை என்பன நடைபெறவுள்ளன. 

இப்பூசைகள் யாவும் நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெறவுள்ளன.

இதன்போது கொழும்பு மற்றும் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொள்ளும் ஐயப்ப சுவாமிமார்களின் பஜனை இடம்பெறும்.
SHARE

Author: verified_user

0 Comments: