15 Dec 2014

கனிஷ்ட பிரிவினருக்கான திறந்த கோல்ப் சம்பியன் கிண்ணப்போட்டி,விளையாட்டு

SHARE
இலங்கை கனிஷ்ட பிரிவினருக்கான திறந்த கோல்ப் சம்பியன் கிண்ணப் போட்டி  14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கை கோல்ப் சங்கத்தின் (SLGU) ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் 15 - 17 வரையான போட்டிகள் கொழும்பு றோயல் கோல்ப் கழகத்தில் (RCGC)  இடம்பெறவுள்ளது.

ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி இதுவரையில் 70 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இப்போட்டியில் பங்கு கொள்ள தமது பதிவை உறுதி செய்துள்ளனர். போட்டியில் வீர வீராங்கனைகள் தத்தமது வயதுகளின் படி வகைப்படுத்தப்படவுள்ளனர். அவ்வகையில், தங்கம் (15- 17 வயது ) வெள்ளி (11-14 வயது), வெண்கலம் (10 மற்றும் 10க்கு கீழ்பட்டவர்கள்) என மூன்று வகைபப்படுத்தப்பட்டு போட்டிகளில் மோதவுள்ளனர்.

அனைத்து போட்டிகளின் இறுதியில் வெற்றி பெறுபவர் கனிஷ்ட தேசிய கோல்ப் சம்பியன் போட்டியின் அரசராக முடிசூட்டப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: