15 Dec 2014

கால்பந்து சம்மேளன பிரதான நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்,விளையாட்டு

SHARE
கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அநுர டி சில்வா மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த 10 அன்று மாலை 7. 15 மணியளவில் அலுவலகத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து அவரது வாகனத்தில் ஏற முற்பட்டபோது கையில் ஹொக்கி துடுப்புடன் வந்த ஒருவர் அவரது தலையில் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த அநுர டி சில்வா தற்போது கொழும்பு பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: