சர்வதேசப்
போட்டிகளில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் சுழற்பந்து
வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து பந்து வீச்சாளர் கனே
வில்லியம்ஸின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின்
இணையத்தளத்தில் இன்று (09) குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவலை இலங்கை கிரிக்கட் நிறுவனமும் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கான வாய்ப்பை சச்சித்ர சேனாநாயக்க பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இவ் இரு பந்து வீச்சாளர்களினதும் பந்து வீச்சு முறையற்றது எனக்கூறி மீள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது சர்வதேச கிரிக்கட் பேரவையின் விதிமுறைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது பந்து வீச்சாளர்களின் கையசைவு 15 டிகிரி மட்டத்திலிருக்க வேண்டுமென்பதேயாகும். அப்பரிசோதனை முறைமைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இருவரினதும் பந்து வீச்சு முறைமை சரியானது எனவும் இனி அவர்களுக்கு எவ்வித தடைகளும் இல்லை என உறுதி செய்துள்ளனர்.(nl)
இந்நிலையில், எதிர்காலத்தில் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கான வாய்ப்பை சச்சித்ர சேனாநாயக்க பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இவ் இரு பந்து வீச்சாளர்களினதும் பந்து வீச்சு முறையற்றது எனக்கூறி மீள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது சர்வதேச கிரிக்கட் பேரவையின் விதிமுறைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது பந்து வீச்சாளர்களின் கையசைவு 15 டிகிரி மட்டத்திலிருக்க வேண்டுமென்பதேயாகும். அப்பரிசோதனை முறைமைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இருவரினதும் பந்து வீச்சு முறைமை சரியானது எனவும் இனி அவர்களுக்கு எவ்வித தடைகளும் இல்லை என உறுதி செய்துள்ளனர்.(nl)
0 Comments:
Post a Comment