17 Dec 2014

தமிழ், முஸ்லிம் உறவுகளை வளர்த்துவருகிறோம்

SHARE
30 வருடகாலமாக அறுந்துபோயிருந்த தமிழ், முஸ்லிம் உறவுகளை தாங்கள் வளர்த்துவருவதாக  கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

விபுலானந்தா பாலர் பராமரிப்பு நிலையத்தின் வருடாந்த கலை விழா ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (15)   நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இனப்பாகுபாடின்றி என்னாலான அனைத்து உதவிகளையும் அதிகமான தமிழ்ப் பிரதேசங்களுக்கு செய்துவருகின்றேன். அபிவிருத்திகளில்  இனப்பாகுபாடு காட்டமுடியாது. அவ்வாறு நான் செய்வதுமில்லை.

நான் வாழ்கின்ற  பிரதேசத்தை விட, அபிவிருத்திகள்  தேவையாகவுள்ள  தமிழ்ப்  பிரதேசங்களில் பல மடங்கு  செய்துவருகின்றேன். இதை  அனைவரும் நன்கறிவர். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே இன ஒற்றுமையை வளர்க்கமுடியும்.

ஜனாபதித் தேர்தல் நெருங்கிவருகின்ற இவ்வேளையில், பல கட்சிகள் தங்களின் முடிவை  இதுவரையில் தீர்மானிக்காமல்; உள்ளபோதிலும்,  தங்களது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தொடர்ந்து ஆதரிக்கும்' என்றார்(tm) 
SHARE

Author: verified_user

0 Comments: