17 Dec 2014

மனித உரிமைகள் தின நிகழ்வு

SHARE
திருகோணமலை, பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினால் மனித உரிமைகள் தின நிகழ்வு திங்கட்கிழமை (15) அனுஷ்டிக்கப்பட்டது.

மனித உரிமைகள் தினம் கடந்த 10ஆம் திகதி 'மனித உரிமைகளும் 365 நாட்களும்' என்ற தொனிப்பொருளில் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டே திருகோணமலை, பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் 'மீள் இணக்கமும்  சகவாழ்வும்' எனும் தொனிப்பொருளில் சுழலும் சொற்போர் என்னும் இந்நிகழ்வினை நடத்தினர்.

திருகோணமலை அலுவலகத்தின் இணைப்பாளர் செல்வி உ.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக, சிரேஷ்ட விரிவுரையாளர், என்.நாகேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

மூதூர் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி தஸ்ரீக் 'மத தலைவர்களது பொறுப்புகள்' எனும் தலைப்பிலும் கிழக்குப் பல்கலைகழக திருகோணமலை வளாக வருகைதரு விரிவுரையாளர் எஸ்.ரி.ஞானேஸ்வரன் 'கல்வியியலாளர்களது பொறுப்புகள்' எனும் தலைப்பிலும் மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் சிரோமன் ரங்கன 'சிவில் சமூகங்களது நடவடிக்கைகளும், பொறுப்புகளும்' எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கினர்.

அத்தோடு சட்டத்தரணி திருமதி எஸ்.லக்ஷ்மிசிறி 'நீதிமன்றத்தினதும் சட்ட அலுவலகர்களதும் பொறுப்புகள்' எனும் தலைப்பிலும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ்.பிரமிளா 'அரச அலுவலகர்களது பொறுப்புகள்' எனும் தலைப்பிலும் தரம் தகன் பாடசாலை அதிபர் சிசிர செனாரத்தன 'அரசியல்வாதிகளது பொறுப்புக்கள்' எனும் தலைப்பிலும் மணற்சேனை நலன்புரி நிலையத்தின் பொறுப்பாளர் 'பொதுமக்களது பொறுப்புகள்' எனும் தலைப்பிலும் தமது கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், அரச அலுவலகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: