27 Dec 2014

மட்டக்களப்பில் 50 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை வெள்ளத்தில்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எம்.சிவலிங்கம் தெரிவித்தார்.

கொக்கடிச்சோலை, வெல்லாவெளி, வாகரை, வவுணதீவு உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பல்லாயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 இலட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது(ad)
SHARE

Author: verified_user

0 Comments: