நேற்று இரவு 8.30 மணியிலிருந்து தொடங்கி இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142.07 மில்லி மீற்றர் மழை பதிவானதாகவும், ஆனால் காலை எட்டரை மணியிலிருந்து நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் மழை பெய்யவில்லை என்றும் வளிமண்டலவியல் அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
இன்று காலையிலிருந்து வெயில் எறித்ததால் மக்கள் தமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
0 Comments:
Post a Comment