15 Dec 2014

கடன் அட்டைகள் மோசடியில் 04 இலங்கையர்கள் உட்பட ஐவர் கைது,வணிகம்

SHARE
இலங்கையர்கள் நால்வர் உட்பட ஐந்து பேர்  தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கடன் அட்டைகள் , செலவு அட்டைகளை தயாரித்து அவற்றின் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து கணணிகள் உட்பட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் சுமார் 100 கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரைணகளில் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் தரவுகளின் அடிப்படையிலேயே இவர்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பணங்களை பெற்று வந்ததாகத் தெரியவந்துள்ளது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: