13 Nov 2014

நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

SHARE
 
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் நாளைய இளம் தலைவர்கள் கௌரவிப்பும், விளையாட்டுக் கழகங்களுக் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நாளை 14.11.2014ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேலை கட்டிட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனமும், விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் டி.எம்.சிசிர குமார விசேட அதிதியாகவும், சாய்ந்தருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ரஜாய் ஆகியோர் அதிதிகளாகவும் மற்றும் விளையாட்டுக் கழங்களினதும், இளைஞர் கழகங்களினதும் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் 22 இளைஞர்கள் கழகங்கள் என்பவற்றிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் 32 நாளைய இளம் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் கௌரவிக்கப்படவுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: