13 Nov 2014

யுத்தத்தினால் சேமடைந்த இரண்டு கட்டிடங்கள் திறந்து வைக்கப்படடது.

SHARE
எஸ்.காத்திகேசு
அம்பாறை, தங்கவேலாயுதபுரத்தில் யுத்தத்தினால் சேமடைந்த இரண்டு கட்டிடங்கள் அரசினால் புனரமைக்கப்பட்டு வியாழக்கிழமை(13) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படடது.

நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்குரி கட்டடமும்;    அம்பாறை மாவட்ட செயலகத்தின் சுமார் 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  அரச உத்தியோகத்தர்களுக்கான அலுவலகமும் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டன. 

திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்தின, நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: