29 Nov 2014

சிறுவர் உரிமைகளை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம்

SHARE
இலங்கை பெந்தகோஸ் மட்டக்களப்பு சபையினரால் நடத்தப்பட்ட, சிறுவர் உரிமைகளை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஒலீவ் வீதியிலுள்ள தேவாலயத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம் திருமலை வீதி, பொலிஸ் சுற்றுவட்டம், சந்தை வீதி, லெடி மெனிங் ரைவ், லொயிட்ஸ் அவனியு வழியாக மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது.

மட்டக்களப்பு சபையின் போதகர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்ஊர்வலத்தில், 'சிறுவர்களின் உரிமைகள், இயேசுவின் அற்புதங்களால் உரிமைகள் பாதுகாக்கப்படல'; போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாதைகளை; ஏந்திச் சென்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: