26 Nov 2014

சமூக மட்ட விபத்துக்கள் குறைப்பு தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல்

SHARE
யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியில் சர்வோதயம் அமைப்பு அமுல்ப்படுத்தும் இவ்வருடத்திற்குரிய செயற்திட்டத்தின் சமூக மட்ட விபத்துக்களை குறைத்தல் எனும் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக வவுணதீவு பிரதேசத்திற்கான கலந்துரையாடல் வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை (26) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் சமூக மட்ட விபத்துக்களில் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர் பெண்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்தல்,   யானைத் தாக்குதல், கிருமி நாசினிகள் கையாழ்தலின் பாதிப்பு, பாலுட்டும் தாய்மார்களின் கவலையீன்மை போன்ற விடயங்கள் தொடர்பாகவும், கிராம சேவகர் பிரிவுகளில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார் திட்டம் தொடர்பாக அறிமுகப்படுத்தினார் மேலும் இந்நிநிகழ்வில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டி.நசீர் பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் டி.பிரபாகரன் மற்றும் கிராம சேவகர்கள் பொருளாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது



SHARE

Author: verified_user

0 Comments: