18 Nov 2014

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஆயுதம் ஏந்தி போராடியும் உரிமை இதுவரை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி

SHARE
எமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம், போன்ற வழி வகைகளைக் மேற்கொண்டு வருகின்றது. இதனைவிட தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடியும் உரிமை இதுவரை கிடைக்கவில்லை என்றால் என்ன காரணம். என்னைப் பெறுத்தவரையில் தற்போதைய ஆளும் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் தேவைகளைப் ப+ர்தி செய்யும் அபிவிருத்தியூடாகத்தான் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.


என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள களுமுந்தன்வெளி கிராமத்தில் இன்று செவ்வாய் கிழமை (18) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையை ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


களுமுந்தன்வெளிக் கிராமத்தின் தலைவர் தெ.சவுந்தரராசா தலைமையில் பொதுக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம பெரியோர்கள் உட்பட பொதுமகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….


அப்போதைய காலகட்டத்தில் என்னுடைய அப்பப்பா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து பல சத்தியாக்கிரக போராட்டங்களை நடாத்தி தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியிருந்தார். அது அப்பேதைய காலகட்டத்திற்குப் பொருந்தும். ஆனால் தற்போதைய  காலகட்டத்திற்கு  இவ்வாறான சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எதுவும் சரிவராது.


தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியூடாக அவர்;களது உரிமையினைப் பெற்றெடுப்பதற்கு தற்போது வழி பிறந்துள்ளது. அதுதான் அபிவிருத்தியூடாக உரிமைகளைப் பெறுவதாகும்.


எமது தமிழ் மக்ளின் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம், போன்ற வழி வகைகளைக் மேற்கொண்டு வருகின்றது. இதனைவிட தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடியும் உரிமை இதுவரை கிடைக்கவில்லை என்றால் என்னைப் பெறுத்தவரையில் தற்போதைய ஆளும் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் தேவைகளைப் ப+ர்தி செய்யும் அபிவிருத்தியூடாகத்தான் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். 


இதற்காக வேண்டி தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்கின்ற அமைப்பினை நான் பயன்படுத்துகின்றேன். இந்தக் கட்சியிலிருந்து கொண்டு எமது தமிழ் மக்ளின் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன்.  எமது மக்கள் கடந்த காலங்களில் பல பொருளாதார ரீதியான இழப்புக்களைச் சந்தித்தவர்கள் எனவே தற்போதைய காலட்டத்தில் தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்.


தற்போது இலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்றது. எனவே எமது மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை ஆதரித்தால் மென்மேலும் பாரிய அபிவிருதிகளை மேற்கொள்ள முடியும்.  சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு அவர்களது சமூகம் சார்ந்து குரல் கொடுத்து வருகின்றார்கள். அதுபோல் எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெறவேண்டும்.  அப்போதுதான் எமது தமிழ் மக்களின் உரிமைகள் அபிவிருத்திகள் பற்றி அரசாங்கத்திடம் உரிமையோடு கேட்டுப் பெறலாம்.


தற்போது நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்து கொண்டு பட்டிருப்புத் தொகுதியில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 3 கோடி ரூபா செலவில் வீதியமைத்தல், தென்னங்கன்றுகள் வழங்குதல், கணணிகள், வழங்குதல் போன்ற பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். இதுபோன்ற மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களும், கோழி வளர்ப்பு, ஆடுவளர்ப்பு, இறால் வளர்ப்பு, போன்ற பல வாழ்வாதாரத் திடங்கைளயும், எதிர் காலத்தில் அமுல்ப்படுத்தவுள்ளேன்.  இந்நிலையில் நான் ஒரு எதிர் கட்சியின் அமைப்பாளராக இருந்திருந்தால் என்னால் எதுவித அபிவிருத்திகைளயும் மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும்.


ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் முயற்சி செய்த, சத்தியாக்கிரகம், அகிசம்மை, ஆர்ப்பாட்டங்கள், போன்ற பாதையில்தான் தற்போதும் சென்று கொண்டிருக்கின்றது இதனால்  எதுவும் நடைபெறப் போவதில்லை.


எனவே நமது தமிழ் மக்கள் எதிர் காத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் நாங்கள் மேற்கொள்ளும், அபிவிருத்திகளை மக்கள் மத்தியில் செய்தால் மக்களிடத்தில் பொருளாதார மாற்றங்கள் தனாகவே வந்து சேரும் பின்னர் தொடர்ச்சியாக எமது உரிமைகiளும் வந்து சேரும். எனவே எதிர்க் கட்சிகளால் எதுவும் செய்ய முடியது. அவர்களால் வெறும் அறிக்கைகளை மாத்திரம்தான் விடமுடியும்.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பட்டிப்புத் தொகுதியில் உள்ள 110 கிராமங்களிலிருந்தும்  ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவுக்குக் கிடைத்த வாக்குகள் சுமார் 1300 வாக்குகள்தான்.   எனவே பட்டிருப்புத் தொகுதியில் 87000 இற்கு மேல் வாக்காளர்கள் உள்ளார்கள் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேத்தலிலும் கடந்த தேர்தலில் செயற்பட்டது போன்று இல்லாமல் பட்டிருப்புத் தொகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கி எமது மக்களின் அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவ வேண்டும். 


தமிழ் மக்களின் தேவைகள் பல இதுவரையில் பூரத்தி செய்யப் படாமலிருக்கின்றன. அந்த தேவைகளை அரசாங்கத்திடமிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரப்போபவர் மஹிந்த ராஜபக்சதான் எனவே எமது மக்களின் அபிவிருத்திகளை மேலும் விருத்தியடையச் செய்வதங்கு ஆளும் கட்சியினை ஆதரிக்க வேண்டும். 


ஆனால் பட்டிருப்பு தேத்தல் தொகுதியில் பல அபிவிருதிகளை அள்ளிக் கொட்டினாலும் இங்குள்ள மக்கள் எதிர்த்துதான் வாக்களிப்பாளர்கள்.

அதற்காக வேண்டி பட்டிருப்பு தொகுதியிலுள்ள வாக்ககைளை நம்பி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் இறங்கவில்லை தென்பகுதியில் 90 வீதமான ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத்தான் இருக்கின்றது.

ஆனால் எமது பிரதேசமும்  நன்கு அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் கடந்த காலங்களில் எதிர்த்து வாக்களித்தது தவறு விட்டது போலல்லாமல் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும்.


ஜனாதிபதித் தேர்திலில் யாரோ ஒரு சிங்களவர் ஒருவர்தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார்; தமிழ் ஒருவர் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு இருக்கும் என்றால் தமிழருக்கு வாக்களிக்கலாம். அனால் இந்த நாட்டில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது. எனவே எமது வாக்குகளை சிங்களவர் ஒருவருக்குத்தான் அளிக்க வேண்டியுள்ளது. அந்த வாக்குளை தேர்தலில் வெற்றியடையப் போகுதம் ஒருவருக்கு வழங்கினால் அதில் எந்தவிதமான பிளையும் இருக்காது.


எனவே எமது மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்களோ இல்லையோ தெரியாது ஆனால் எமது பிரதேசத்திலுள்ள கிறவல் வீதிகள் அனைத்தும் கார்பட் வீதிகளாகவும். கொங்றிட் வீதிகளாகவும் மாற்றமடைந்து பல அபிவிருத்திகளை முன்முனெடுக்க வேண்டுமாக இருந்தால் ஆழும் கட்சியினை ஆதரயுங்கள் இது எனது ஆலோசனை மாத்திரம்தான் முடிவு எடுக்க வேண்டியது மக்களின் மனங்களில்தான் அமைந்திருக்கினறது. என அவர் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: