25 Nov 2014

பாடசாலையின் முன் வாயிற் கோபுரம் அமைக்கும் பணி ஆரம்பம்.

SHARE
தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்தியமகா வித்தியாலய தேசிய பாடசாலையின் முன் வாயிற் கோபுரம் அமைக்கும் பணி ஆரம்பம்.


பல நெடுங்காலமாக பாடசாலை   முன் வாயிற் கோபுரம் ஒன்றின் தேவை உணரப்பட்டு கோபுரம் அமைக்கும் பணி அரம்பிக்கப்பட்டு இடைநடுவே  விடப்பட்டிருந்து

இந் நிலமையை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா, ஆகியோரின் கவனத்திற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கொண்டு வந்ததனை அடுத்து அவர்களின் பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில்  இவ் வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இதற்கா மேற்படி மூன்று மாகாண சபை உறுப்பினர்களும் சேர்ந்து இரண்டு லட்சத்தி எழுபதினாயிரம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தனர்.

தற்போது இப்பாடசாலையின்  முன் வாயிற் கோபுர வேலைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்தியமகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: