24 Nov 2014

கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத் துறை தொடர்பான சந்திப்பு.

SHARE
கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத் துறையை முன்னேற்றும் வகையில் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் எடுத்து வரும் நடவடிக்கையின் மற்றுமொருகட்டமாக பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழு ஒன்று மேற்படி அமைச்சரை அவரது கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (23) சந்தித்து கலந்து ரையாடியுள்ளது.

மாகாணஅமைச்சரின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு வந்த இஸ்லாமிய நாடுகளின் பொறியியலாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவரும் பாகிஸ்தான் பொறியியல் கவுன்சிலின் தலைவருமான பொறியியலாளர் செய்யித் அப்துல் காதிர் ஷா தலைமையிலான தூதுக் குழுவினர் கிழக்கின் விளையாட்டுத் துறைவளர்ச்சிபெற உதவுவதாக உறுதியளித்தனர்.
தாம் ஆக்கபூர்வமான உதவிகளையும் பங்களிப்புக்களையும் நல்குவதாகவும் இக்குழுவினர் அமைச்சரிடம் தெரிவித்தனர். 

கிரிக்கட் பயிற்சி எடுப்பதற்கு போதிய வசதியின்மை காரணமாகவே கிழக்கு விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் தடை உள்ளதாக அமைச்ர் ஹாபிஸ் நசீர் அஹமட் தூதுக்குழுவிடம் எடுத்துரைத்தார்.

முறையான பயிற்சியின்மையும் தரமான விளையாட்டுத் திடல் இல்லாமையுமே இந்தவீரர்கள் சர்வதேசரீதியில் போட்டிகளில் பங்கேற்று இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு மண்ணுக்கு புகழ் சேர்ப்பதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மாகாணஅமைச்சரின் கருத்துக்கயை அவதானித்த தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தரம் வாய்ந்த கிரி
க்கட் விளையாட்டு மைதான மொன்றை அமைப்பதற்கும் கிழக்கு இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் தமது கவுன்சில் நடவடிக்கை எடுக்குமெனவும், இது தொடர்பில் பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அதிகாரிகளுடனும் பேச்சு நடாத்தப்படும் எனவும், உறுதியளித்ததாக கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: