மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்த அவசர குழுக் கூட்டமொன்று இன்று திங்கட் கிழமை (24) ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நகர சபையின் ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஏ.எம்.எம்.ஹஸீர் பிரதேச செயலர் எஸ.;எல்.எம்.ஹனிபா மற்றும் பிரதேச பொது நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தனர்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதனால் எதிர்பார்க்கப்படும் வெள்ளம் மற்றும் கடும் காற்று போன்ற அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இதன்போது கருத்துப் பரிமாறப்பட்டது.
அவசரகால நிலைமையின்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அனர்த்
த முகாமைத்துவ அமைச்சு தயாராகவுள்ளதாக இதன்போது அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment