21 Mar 2014

பாற்குட பவனி

SHARE

(கமல்)


மட்டக்களப்பு தேத்தாத்தீவு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பு நிகழ்வாக பாற்குட பவனி இடம்பெற்றது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.தயாநிதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது தேத்தாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி -தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்தது.

இப்பாற்குட பவனி நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இவ்வாலய உத்சவம் ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி தீ மிதிப்பு நிகழ்வுடன் ஆலய உற்சவம் இனிதே நிறைவுபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: