21 Mar 2014

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த காலத்திலும் அரசாங்கத்துக்கு துரோகம் செய்யப் போவதில்லை

SHARE
 (சக்தி)



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த காலத்திலும் அரசாங்கத்துக்கு துரோகம் செய்யப் போவதில்லை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற நோக்கம் அந்த கட்சிக்கு கிடையாது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் அரசாங்கத்துக்கும் கிடையாது.

என கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி ,கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் தெரிவித்தர்.
மட்டக்களப்பு -ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் கல்லூpயின் காலாண்டு பரிசளிப்பு விழா நேற்று திங்கட் கிழமை (17) இடம்பெற்றது.
இந்நிழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜனாப் முகைதீன் பாவா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
இதன்போது அர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும், முஸ்லிம் காங்கிரஸினை தவறாக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. மக்கள் வெறுமனே முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிப்பதை விடுத்து அரசாங்கத்தினை பலப்படுத்துவதன் அவசியம் தற்போது எழுந்துள்ளது.
எனத் தெரிவித்த அவர்



இப்பரிசழிப்பு விழா நிகழ்வுக்கு ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இந்த விழாவில் கலந்து கொண்டமை இப்பிரதேசத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும் பிரதேச அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் முன்வந்துள்ளமையையும் கண்கின்றபோது மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு இந் நகர சபை உறுப்பினர்கள் பிரதேசத்தின் நன்மை கருதி எந்த ஒரு அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்த விரும்பினாலும் அதற்கு தான் ப+ரண ஒத்துழைப்பை வழங்குவேன்.  எனவும் அர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: