1 Mar 2014

படுவான்கரைப் பகுதியில் காலபோக வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பம்.

SHARE
(சக்தி)



மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளி வயற்கண்டத்தில் காலபோக வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
படுவான்கரைப் பகுதியில் செய்கைபண்ணப் பட்டிருந்த பெரும்பொக நெல் அறுவடை தற்போது முடிவுறும் தறுவாயில் இருக்கும் இந்நிலையில் தற்போது கால போக வேளாண்மைச் செய்கைக்கான அரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை கடந்த மூன்று நாட்களாக
இப்குதியில் இடையிடையே மழை பெய்து வருவதுடன் வானம் தொடர்ந்து மப்பும் மந்தாரமுமாகக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: