(வரதன்)
பிரதியமைச்சர் விநாயகமூர்தி-முரளிதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சிறுவர் நிதியத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தின் எல்லைக் கிராமமான சின்னவத்தை கிராமத்திலுள்ள வறிய 11 (சிங்கள) மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) மட்டு. மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .
சிறுவர் நிதிய கிழக்குப் பிராந்திய முகாமையாளர் பேனாட் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீழ் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி-முரளிதரன், வவுணதீவு பிரதேச செயலாளர் வே.தவராஜா பிரதியமைச்சரின் செயலாளர்கள் மற்றும் சிறுவர் நிதிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மேற்படி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிகைத்தனர்.
அண்மையில் சின்னவத்தைக் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காகச் சென்ற மேற்படி பிரதியமைச்சர் இவ்மாணவர்களின் நிலைமையை நேரில் கண்டறிந்ததன் பின் அவரது முயற்சியினால் இவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment