19 Jan 2014

ரூபாய் நோட்டுகளால் சுவர் எழுப்பி சாதனை படைத்த சீனர்கள்

SHARE
சீனாவில் சீனப்பெருஞ்சுவரை கட்டி சாதனை படைத்த சீனர்கள் ரூபாய் நோட்டுக்களால் சுவரை எழுப்பி புதிய சாதனையை செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த கிராமம் ஒன்றில் கூட்டுறவு அமைப்பு ஒன்று, தங்களிடம் சேரும் பணத்தை வருடம் முழுவதும் ஒரு வங்கியில் செலுத்தி வந்தது. அதில் மொத்தம் 22 லட்சம் டாலர் மதிப்பு சேர்ந்தவுடன் மொத்த பணத்தையும் எடுத்து தங்களது உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுப்பதற்காக ஒரு வேனில் எடுத்து வந்தது.
வேன் மாலை நேரத்தில் அந்த கிராமத்துக்கு வந்ததால், காலை வரை அந்த பணத்தை பாதுகாக்க, பணம் முழுவதையும் வேனில் இறக்கி சுவர் மாதிரி வெட்ட வெளியில் அடுக்கி வைத்தனர். அதை இரவு முழுவதும் ஏழு காவலாளிகள் பாதுகாத்தனர். இரவும் சிறிது நேரம் அந்த பணக்கட்டிலான சுவர் மீது சில காவலாளிகள் படுத்து தூங்கினர்.
பின்னர் காலையில் அந்த பணம் அந்த கிராமத்தில் உள்ள 340 கூட்டுறவு உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அந்த கிராம மக்கள் பணத்திலான அந்த சுவரை வேடிக்கை பார்த்து அதிசயப்பட்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: