மருதமுனை அல்-மினன் வீதியில் உள்ளஏ.சி.சுபைதாஎன்பவருடையவீட்டில் கடந்த 16.01.2014 ம் திகதிமாலை 4.30 மணியளவில் மதுபோதையுடன் கையில் கூரியகத்தியுன் கொலை செய்ய வந்துள்ளேன் எனக் கத்திக் கொண்டு 45 வயதுநிரம்பியநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
குறித்தவீட்டில் ஆண்கள் யாருமற்ற நேரத்தில் புகுந்தவர், வீட்டிலிருந்த ஏ.சி.சுபைதா என்பவரைகத்தியால் குத்த முயற்சித்த போது அயலவர் ஒருவர் தனதுஉயிரையும் துச்கமெனமதித்து வீட்டிலிருந்த குறித்த பெண்னைக் காப்பாத்தியுள்ளார்.
வீட்டுக்குள் புகுந்தவர் அயலவரின் உதவியோடு பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக வீட்டுக்குள் அடைக்கப்பட்ட போதுவீட்டுக்குள் அடைக்கப்பட்ட கொலைசெய்யமுற்பட்டவரின் உறவினர்கள் பலவந்தமாகவீட்டின் கூரையைஉடைத்துக் கொண்டு உட்புகுந்து அங்கிருந்தவர்களையும் வீட்டின் உடமைகளையும் உடைத்து சிக்குநூறாக்கியதுடன் சுபைதா என்பவரின் மகன் சியா ஹலால் சிக்கன் உரிமையாளரின் வலதுகையையும் துண்டாடியுள்ளனர்.
இந்தவிடயம் தொடர்பாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளானவீட்டின் படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment