30 Jan 2014

பட்டிருப்பு கல்வி வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பெண்கள்

SHARE
(கமல்)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில் நுட்பட் ஆசிரியர்களுக்கும், பற்றாக்குறை இருந்து வருகின்றது. என பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி-புள்ளநாயகம் தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். 
இந்நிகழ்வில்  கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்குகையில் 
பட்டிருப்பு கல்வி வலயத்தினுள் 1200 ஆசிரியர்கள் இருந்தாலும் பாடரீதியாக ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த விடயம் குறித்து கிழக்கு மாககாண அளுரிடமும் எடுத்துக் கூறியிருந்தேன் அதன் காரணமாக 40 ஆசிரியர்கள் இந்த வலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 
ஆனாலும் தற்போது 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில் நுட்பட் ஆசிரியர்களுக்கும், எமது வலயத்தில் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்நிலையில் கலைப் பட்டதாரிகளையும், ஆரம்பக் கல்வி ஆசிரியர்களையும், வைத்து அவர்களுக்கு பயிற்சியளித்து விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கு பயன்படுத்தி கடந்த காலங்களில் மாணவர்களி;ன் பெறுபேறுகளை உயர்தியிருந்தோம். அந்த வகையில் இந்த வலயத்திற்குட்பட்ட அதிபர்கள். ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பெண்களாக இருந்து சிறந்த முறையில் கற்பித்து வருகின்றார்கள். இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் 72 வீதமான மாணவர்கள் இந்த வலயத்தில் பெற்றுள்ளமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும் இவை மாத்திரமின்றி மாவட்ட, மாகாண, மட்டங்களிலும் பல வெற்றிகளை ஈட்டுவதற்காக கல்வி அதிகாரிகள் அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைத்திருந்தார்கள். கடந்த வருடம் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை எமது வலயம் பெற்றிருந்தது. அதுபோல் கிழக்கு மாகாணத்திலுள்ள கொய்க்கா பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் முதலாம் இடத்தினையும். பிள்ளைநேயப் பாடசாலைகளுக்கிடையிலான செயற்பாட்டுப் போட்டியில் முதலாம் இடத்தினையும் சமூக விஞ்ஞானமட்ட போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும், பெற்று இவ்வலையத்தில் சாதனை படைத்துள்ளோம்.
இதனை விட மாகாண மட்டத்திலும் தேசிய மட்டமத்திலும் , ஏனைய கல்வி வலயங்களிலிரந்தும், பார்வையிட்டுச் செல்வதற்காகவேண்டி முன்மாதிரியான பாடசாலைகளை அமைத்திருக்கின்றோம். என்பதனை நான் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விளையாட்டில் மாகாமட்டத்தில் எமது கல்வி வலயம் இரண்டாம் இடம்பெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையிலும் பல பாடசாலைகளில் மைதானப் பற்றாக்குறைகளோடு இயங்கி வருகின்றன. இவ்வாறு பாடசாலைகளில் காணப்படுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறைகளை தீர்க்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் இவ்விடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன். 
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆளணியினைப் பொறுத்தளவில் தாராளமாகவே உள்ளது. அந்த வகையில் கல்வி அதிகாரிகள், அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள். என அவர்     தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: