(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கான கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுவேஸ்வரி-புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்தி முரளிதரன்,பட்டிருப்பு , கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.விமலநாதன் (முகாமைத்துவம்) , மா.உலகேஸ்பரம் (நிர்வாகம்), எஸ்.ஞானராசா கல்வி அபிவிருத்தி), ரி.நித்தியானந்தம் (திட்டமிடல்), ஆகியோரும் பாடசாலை அதிபர்கள்,
கோட்டக் கல்வி அதிகாரிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்தரையாடப் பட்டதோடு எதிர் காலத்தில் இந்தக் கல்வி வலயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்காகவும் கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment