(வரதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமமான வவுனதீவு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட இருநூறுவில் கிராமத்திற்கான மின் விநியோகம் நேற்று முன்தினம் (23) 17 மில்லியன் ருபா செலவில் மக்கள் பாவனைக்கு உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப் பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் இணைப்பாளரும் சுதந்திரகட்சியின் பிரதான அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இக்கிராமத்திற்கான மின் விநியோகத்தை ஆரம்பித்துவைத்தார்.
யானை தாக்கத்திற்குள்ளாகும் 52 குடும்பங்கள் இதனால் பெரிதும் நன்மையடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் பிரசாத் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த மின் விநியோகம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment