2 Jan 2024

போரதீவுப்பற்றில் இரண்டு வீதிகளின் தரைவழிப் போக்குவரத்து தடை 288 குடும்பங்களைச் சேர்ந்த 1149 பேர் இடம்பெயர்வு.

SHARE

போரதீவுப்பற்றில் இரண்டு வீதிகளின் தரைவழிப் போக்குவரத்து தடை 288 குடும்பங்களைச் சேர்ந்த 1149 பேர் இடம்பெயர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக பிராதான குளங்கள் நிரம்பி வான்வாய்ந்து வருவதோடுசிறிய குளங்களும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில்  அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வெல்லாவெளி மண்டூர், மற்றும் திவுலானை வெல்லாவெளி, ஆகிய இரண்டு பிரதான வீதிகளையும் ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதிகளுடனான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வேத்துச்சேனை, வெல்லாவெளி, மண்டூர், கோவில்போரதீவு, முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதீவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் வெள்ள அனர்த்த்தினால் 288 குடும்பங்களைச் சேர்ந்த 1149 பேர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அப்பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் பாதிப்புற்றுள்ள மக்களுக்குரிய சேவைகளை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத் தகவர்கள் தெரிவிக்கின்றன.













SHARE

Author: verified_user

0 Comments: