25 Dec 2023

இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் முன்னெடுப்பு.

SHARE

இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் முன்னெடுப்பு.

கிழக்கு மாகாணத்தில் இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு ஆராதனைகள் முன்னெடுப்பு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனைகள் மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

யேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு  நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் யேசு கிறிஸ்த்து பிறப்பின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது. யேசு கிறிஸ்து வழிபாடுகள் இம்முறை சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னை யோசப் தலைமையில் ஆலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் உட்பட பங்கத்தந்தைகளினால் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யேசு கிறிஸ்துவினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு தொட்டியில் பாலனின் உரு ஆயரினால் வைக்கப்பட்டு யேசு கிறிஸ்த்து பிறப்பு நினைவு கூரப்பட்டது. அதனை தொடர்ந்து விசேட யேசு கிறிஸ்த்து பிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நள்ளிரவு ஆராதனைகள்  வழிபாடுகளில் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: