16 Dec 2023

மட்டக்களப்பில் வெள்ளம் வீதியை ஊடறுத்துப் பாய்கிறது- குளங்களின் நீர் மட்டமும் உயர்வு வான்கதவுகள் திறப்பு.

SHARE

மட்டக்களப்பில் வெள்ளம் வீதியை ஊடறுத்துப் பாய்கிறது- குளங்களின் நீர் மட்டமும் உயர்வு வான்கதவுகள் திறப்பு.

வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதையும், அவதானிக்க முடிகின்றது. அதிகளவு வெள்ளநிலமையால் பல ஏக்கர் வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பிரயாணிகளும் பொதுமக்களும், மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றர்.

அந்தவகையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம், 16அடி 6 அங்குலமும் அக்குளத்தில் 10 அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகின்றது, வாகனேரி குளத்தின் நிர்மட்டம் 16அடி 11அங்குலம், கட்டுமுறிவு குளத்தின் நீர்மட்டம் 6அடியும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலம் அக்குளத்தில் 12அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது.

வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 6அங்குலம் அக்குளத்தில் 12அங்குலத்தில் மேலதிக நீர் வெளியேறுகிறது, புணானை அணைக்கட்டு 4அடி 7அங்குலம், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி 2அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 2அங்குலமும் அக்குளத்தில் 2 வான்கதவுகள் 2.5உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அக்குளங்களுக்குப் பொறுப்பான பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2023.12.16 ஆம் திகதி காலை 6 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைப் பகுதியில் 41 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 85.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 69.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 35 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 33 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 46 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும்பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான் கிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாகவும், இதனால் பல தொற்று நோய்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்கின்றனர்.
















 

SHARE

Author: verified_user

0 Comments: