28 Nov 2022

மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE

மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில்   தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு காத்தான்குடி 2ம் குறிச்சி வாவிக் கரையோரம் அமைக்கப்படவுள்ள தனியார் தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சனிக்கிழமை (26) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பொது மக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் இந்த கோபுரத்தை அமைக்க கூடாது என இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். குறித்த இப்பிரதேசத்தில் அரச பாடசாலைகள் அரச வைத்தியசாலை பள்ளிவாயல்கள் உட்பட பொது நிறுவனங்கள் பல அமைந்துள்ளன.

இப்குதியிலுள்ள பொதுமக்கள் பெண்கள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த இடத்தில் கோபுரம் அமைக்கப்படுவதால்  பொதுமக்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதாகவும் குறித்த இடத்தில் பாடசாலை விளையாட்டு மைதானம்  ஒன்றை அமைத்து தருமாறும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வருகை தந்து குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உரிய மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்
பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்ததையிலும் ஈடுபட்டதுடன் அரச அதிகாரிகளுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.










SHARE

Author: verified_user

0 Comments: