29 Aug 2022

மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்குவதற்காக 159 அசிரி மூடைகள் வழங்கி வைப்பு.

SHARE

மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்குவதற்காக 159 அசிரி மூடைகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி செய்து சத்துணவு வழங்குவதற்காக திங்கட்கிழமை(29) ஒருதொகுதி அசிரி மூடைளையும், நிதி உதவியையும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளருமான, லயன் தவஞானசூரியம் அவர்கள் களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழககத்தின் ஊடாக இவ்வுதவி மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது தலா 30 கிலோ நிலையுடை 159 அரிசிமூடைகளும், 3 இலெட்சம் ரூபாய் நிதியும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பி.திவிதரன், எம்.எச்.ரிபாசா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.அருள்ராசா, களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழககத்தின் தலைவர் .சஞ்ஜீவ், பாடசாலை அதிபர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

லயன் தவஞானசூரியம் அவர்களினால் களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத்தினூடாக தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அரிசி, மற்றும் நிதி உதவிகளை பட்டிருப்பு வலயத்தின் கீழுள்ள போரதீவுப் பற்றுக் கோட்டம், மற்றும் மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டங்களிலுள்ள 70 பாடசாலைகளுக்கு பகிர்ந்தழித்து, இதனை மாணவர்களிக் போசாக்கு வளர்ச்சிக்கு இலைக் கஞ்சி தயார் செய்து வழங்கவுள்ளதாக இதன்போது கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்இதன்மூலம் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களின்போசாக்கு விருத்திஊக்கமாகக் கற்றல்இடைவிலகல்களைத் தவிர்த்தல்இணைப்பாட விதானங்களில் மாணவர்களின் நாட்டங்களை அதிகரிக்கும் எனவும்தமது கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களின் நன்மை கருத்தி இப்போருதவிதைய நல்கிய லயன் தவஞானசூரியம் அவர்களுக்கும்இதனை ஏற்பாடு செய்து களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத்திற்கும் இதன்போது நன்றியைறிதலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: