1 Apr 2022

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட முன்னாள் விடுதலைப்புலி முக்கியஸ்தர் உட்பட நால்வர் கைது.

SHARE

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட முன்னாள் விடுதலைப்புலி முக்கியஸ்தர் உட்பட நால்வர் கைது

—கிறனைட் வாள் கோடாரி ஹெரோயின் ஆயுதங்கள் மீட்புமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயங்கேணி பிரதேசத்தில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நால்வரை வியாழக்கிழமை (31) அதிகாலை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் குறித்த பிரதேசத்திலுள்ள பல வீடுகளை சுற்றிவளைத்தபோது மக்களைப் பயமுறுத்தி பாரிய கொள்ளை கொலை கத்திக்குத்து தங்கம் வழிப்பறி வீடுகளை உடைத்து கொள்ளையிடல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நால்வர் கைது செய்யப்பட்டனனர்.

இத்தேடுதலின்போது வவுனியாவைச் சேர்ந்த 40வயதுடைய முன்னாள் வடுதலைப்புலி முக்கியஸ்தரான சோழன் என்பவர் கிறனைட்டுன் கைது செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு ஏறாவூர் பொலிசில் இரு வழக்குகள் உள்ளன.
மற்றொருவர் வாள் கோடரி என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 11 வழக்குகள் உள்ளன. மேலும் ஒருவர் 6கிராம் ஹெரோயினுடன் கைதான நிலையில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மொத்தமாக நால்வர் கைதாகியுள்ள நிலையில் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

.









SHARE

Author: verified_user

0 Comments: