மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு கல்முனை பிதான வீதி ஓரத்தில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் புதன்கிழமை(23) மாலை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஓந்தாச்சிமடம் எண்பது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தெய்வநாயகம் கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி அவர்களின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment