19 Feb 2022

கடல் கொந்தழிப்பால் மீனவர்கள் பாதிப்பு.

SHARE

கடல் கொந்தழிப்பால் மீனவர்கள் பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கடற்பகுதியில் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் உள்ளதனை அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நிலையில் கடல் கொந்தழிப்பு அதிகரித்துக் காணப்படுவதனால் தாம் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலமை ஏற்படுள்ளதாகவும், இதனால் தமது தோணிகளை கரையேற்றி வைத்துள்ளதாகவும் கடற்றொழில் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தின் களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள பல மீனவர்களே இந்நிலமையை எதிர் கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.            








SHARE

Author: verified_user

0 Comments: