19 Oct 2021

அளுநரின் அறிவுறுத்தலின் பேரில் பாடசாலைளை சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் ஆரம்பம்.

SHARE

அளுநரின் அறிவுறுத்தலின் பேரில் பாடசாலைளை சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் ஆரம்பம்.

பாடசாலைகள் ஆரம்பிப்பதை முன்னிட்டு மாகாண அளுநரின் அறிவுறுத்தலின் பேரில் பாடசாலைளை சுத்தம் செய்யும் சிரமதான பணிகள் பட்டிருப்பு வலயத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலத்தில் வலயத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் தலமையில் செவ்வாய்கிழமை (19)  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமாதான பணியில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலத்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை வளாகம் துப்பரவு செய்யப்பட்டதுடன் வகுப்பறைகளும் ஒழுங்கு படுத்தப்பட்டு பாடசாலை ஆரம்பிப்பதற்காக இதன் போது தயார்படுத்தப்பட்டது.







 

SHARE

Author: verified_user

0 Comments: