23 Oct 2021

வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு ஆலகண்டி சிவன் ஆலய இராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

SHARE

வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு ஆலகண்டி சிவன் ஆலய இராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திருமலை பிரதான வீதியில் அமைந்துள்ள  பழம்பெரும் ஆலயமான கறுவாக்கேணி ஆலகண்டி சிவன் ஆலயத்திற்கான இராஜகோபுர  திருப்பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை ( 21.10.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.15 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. பிள்ளையான் கஜரூப சர்மா தலைமையில் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று பக்தர்கள் புடைசூழ  இடம்பெற்றது.

பிரபல வர்த்தகர் ஐயாத்துரை நிர்மலகாந்தன் அவர்களின் நிதியுதவியுடனும், பொதுமக்களின் பூரணமான பங்களிப்புடனும் இடம்பெறும் இவ்இராஜகோபுர  திருப்பணிக்கான நிகழ்வில் ஆலய தலைவர் மனோகரன், செயலாளர் தவசுதன், பொருளாளர்  மோகன் மற்றும்  ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் கோறளைப்பற்று பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், இத்திருப்பணிக்கான உதவியை நல்கும் பிரபல வர்த்தகர் ஐ.நிர்மலகாந்தன், பிரதேச இந்துபெருமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.













 

SHARE

Author: verified_user

0 Comments: