9 Sept 2021

ஊரடங்கு சட்ட நேரத்தில் சுற்றுலா விடுதியில் சட்டவிரோத சாராய விற்பனை! ஒருவர் கைது சாராய போத்தல்கள் மீட்பு.

SHARE

ஊரடங்கு சட்ட நேரத்தில் சுற்றுலா விடுதியில் சட்டவிரோத  சாராய விற்பனை! ஒருவர் கைது சாராய போத்தல்கள் மீட்பு.

தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்பனை செய்த சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடியில் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்வி விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு  11.30 மணியளவில் கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின்போது மட்டக்களப்பு வாவியூடாக படகுகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனை இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் குறித்த சுற்றுலா விடுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பன செய்யப்பட்ட 73 சாராய போத்தல்களுட ஒருவர் கைது செய்யட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.









SHARE

Author: verified_user

0 Comments: